கிரிக்கெட்

நியூசிலாந்தை வாஷ்-அவுட் செய்த இந்திய அணி!

Published

on

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அபாரமாக தொடரை வென்றுள்ளது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்றைய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா மிக அபாரமான தொடக்கத்தை கொடுத்து அரைசதம் அடித்தார் என்பதும் கடைசி நேரத்தில் தீபக் சஹர் அதிரடியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்த நிலையில் 185 என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே அரைசதம் அடித்தார்.

அதன்பின் விளையாடிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியதை அடுத்தது நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து இந்திய அணியின் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்று 3 – 0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை பெற்றுள்ளது என்பதற்கு உள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version