கிரிக்கெட்

டெஸ்ட்டில் தோற்றாலும் டி20ல் கிங் என நிரூபித்த இந்தியா: தொடரை வென்று அசத்தல்

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இருப்பினும் இந்திய அணி டி20 தொடரில் தொடர் வெற்றி பெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 46 ரன்கள், ரோகித் சர்மா 31 ரன்கள், ரிஷப் பண்ட் 26 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதனை அடுத்து 171 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மொயின் அலி 35 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை சேர்ந்த புவனேஸ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் இங்கிலாந்து விக்கெட்டுக்களை வீழ்த்தின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்று தொடர்களில் உள்ள டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி வரும் பத்தாம் தேதி அதாவது நாளை நடைபெறும்.

 

 

seithichurul

Trending

Exit mobile version