கிரிக்கெட்

2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி: விராத், இஷான் கிஷான் அபாரம்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் முதலாவது டி20 தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே 2வது டி20 போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த நிலையில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 13 பந்துகள் மீதமிருந்த நிலையில் 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினார். இஷான் கிஷான் 32 பந்துகளில் 46 ரன்களும் விராட் கோலி 49 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார்கள். கடைசியாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். இந்த நிலையில் நேற்றைய வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரில் உள்ளது.

 

 

Trending

Exit mobile version