கிரிக்கெட்
கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய ரோஹித் சர்மா.. இந்தியா தோல்வி
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த நிலையில் காயத்துடன் இருந்த ரோகித் சர்மா அதிரடியாக களம் இறங்கினார். அவர் களத்தில் இறங்கி பவுண்டரிகளும் சிக்சர்களுடன் அடித்ததால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் இறுதியில் தோல்வி அடைந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடைசி ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் அவர் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பதால் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இருப்பினும் ரோகித் சர்மாவின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.