இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: இந்திய ராணுவம் பதிலடி!

Published

on

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய ராணுவம் இதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அத்துமீறு நுழைந்த பாகிஸ்தானின் எஃப்16 ரக விமானம் சுட்டு பொசுக்கப்பட்டது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக விமானப்படையை அனுப்பி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தன் ராணுவம் தொடர்ந்து அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் காலை 6 மணி முதல் 7 மணி வரை இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எல்லையில் மீண்டும் இந்திய ராணுவம் உஷார் நிலையில் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version