கிரிக்கெட்

கே.எல்.ராகுல் அபார சதம்: 300ஐ தாண்டியது இந்திய ஸ்கோர்!

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று புனேவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 336 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கனவே முதலாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்று முதலில் பேட்டிங் செய்து அபாரமாக விளையாடியது. கேஎல் ராகுல் 108 ரன்களும், விராட் கோலி 66 ரன்களும், எடுத்தனர். ரிஷப் பண்ட் அதிரடியாக 40 பந்துகளில் 77 ரன்கள் அடித்தார் என்பதும் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நிமிடங்களில் இங்கிலாந்து அணி 337 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாட உள்ளது. அந்த அணி 337 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? அல்லது இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version