Connect with us

இந்தியா

60 மணி நேரம் நடந்த பிபிசி அலுவலக சோதனை முடிந்தது.. என்னென்ன ஆவணங்கள் சிக்கியது?

Published

on

பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி திடீரென வருமானவரித்துறை அலுவலர்கள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் சோதனை செய்து வந்தனர். சுமார் 60 முதல் 70 ஊழியர்கள் இந்த சோதனைகளில் ஈடுபட்டதாகவும் இரவு பகலாக இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

சோதனை நடைபெறும் நேரத்தில் பிபிசி அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் அதேபோல் உள்ளே புதிய ஊழியர்கள் வர அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு பிபிசி தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

பிபிசி ஊழியர்களின் செல்போன் மற்றும் லேப்டாப்கள் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும் அதில் பினாமி முறையில் பணம் அனுப்பப்பட்டதா? கருப்பு பணம் பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்ட தாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 60 மணி நேரமாக நடந்த சோதனை முடிவுக்கு வந்ததை அடுத்து நேற்று வருமானத்துறை அதிகாரிகள் பிபிசி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் அவர்கள் தங்களுடன் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பிபிசி அலுவலகத்தில் சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் என்னென்ன? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வருமானவரித்துறை அலுவலர்கள் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிபிசி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் வருமானவரித்துறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறி உள்ளனர். நாங்கள் அதிகாரிகளுக்கு தொடர்ந்து முழு அளவில் ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் எங்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். நாங்கள் எங்கள் ஊழியர்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ஊழியர்களில் சிலர் நீண்ட கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர். ஒரே இடத்தில் மூன்று நாட்களாக தங்க வேண்டி இருந்தது, அவர்களின் நலனே எங்களுக்கு முன்னுரிமை. இப்போது எங்கள் அலுவலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

மேலும் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!