வணிகம்
கேரள வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் தேதி காலக்கெடு நீட்டிப்பு!
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்து ஆகஸ்ட் 31-ல் இருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது கேரளாவில் உள்ள வரி செலுத்துனர்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஜூலை 31-ம் தேதியே வருமான வரி தாக்கல் செய்யக் கடைசி நாள் என்று இருந்த நிலையில் அதனை ஜூலை மாத இறுதியில் மத்திய நேரடி வருமான வாரியம் ஆகஸ்ட் 31-ம் தேதியாக நீட்டித்து அறிவித்து இருந்தது.
இதனால் காலதாமதமாக வருமான செலுத்தும் போது இருந்த 5000 ரூபாய் அபராதத்தில் இருந்து பலருக்கும் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
கேரளா வெள்ளத்தில் 383 நபர்கள் உயிர் இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறப்படுகிறது. வெள்ளம் குறைந்ததை அடுத்து மறு கட்டமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.