சினிமா செய்திகள்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை வீட்டில் ஐடி ரெய்டு!

Published

on

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய தமிழ் நடிகை மற்றும் பாலிவுட் இயக்குனர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் வீட்டில் அதிரடியாக வருமானவரித் துறையினர் ரெய்டு செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கடந்த 3 மாதங்களாக புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சில திரையுலகினர் குரல் கொடுத்தனர்.

அந்த வகையில் நடிகை டாப்ஸி மற்றும் நடிகர், இயக்குனர் அனுராக் காஷ்யப் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

மும்பையில் உள்ள இந்த இருவருக்கும் சொந்தமான 20 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடப்பதாகவும் இந்த சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை டாப்சி தனுஷின் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version