தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி ரெய்டு!

Published

on

முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சி வந்தபிறகு முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் தற்போது ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

20க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர் என்பதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று குற்றச்சாட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து துறை அமைச்சராக எம்ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் இருந்தபோது கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது அவருடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வருமான வரி சோதனை காரணமாக எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருமான வரி சோதனை முடிவில் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version