தமிழ்நாடு
லலிதா ஜூவல்லரியில் 2வது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு!
பிரபல நகைக்கடை நிறுவனமான லலிதா ஜுவல்லரியில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளும் சோதனை தொடர்கிறது.
சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் உள்ள லலிதா ஜுவல்லரி கிளைகளிலும் நேற்று முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாகவும், வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் நகைகள் குறித்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.