தமிழ்நாடு
என்னை உட்பட அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் பட வேண்டும்: கமல் ஹாசன்
பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
— Kamal Haasan (@ikamalhaasan) September 4, 2018
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக எதிராகக் குரல் எழுப்பியதாகச் சோபியாவை கைது செய்தது தவறு என்று டிவிட்டர் மூலம் தனது கண்டனத்தினை மக்கள் நீதி மைய தலைவரான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் தனது டிவிட்டரில் “பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம்.அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.