தமிழ்நாடு

படர் தாமரை வேண்டுமானால் மலரும்.. தாமரை மலராது.. சீமான் கிண்டல்!

Published

on

சென்னை: தமிழர்களுக்கு படர் தாமரை வேண்டுமானால் மலரும், ஒரு போதும் தாமரை மலராது என்று நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் அலுவலகத்தில் வேலுநாச்சியாரின் 222வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதன்பின் நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பாஜகவை விமர்சித்து இந்த பேட்டியில் பேசினார்.

அதில், பாஜகவிற்கு தமிழகம் மீது எப்போதும் அக்கறை கிடையாது. தமிழர்களை அவர்கள் எப்போதுமே ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. நாம் எல்லாம் பாஜகவிற்கு வெறும் ஓட்டுகள்தான்.

தமிழகத்தில் தாமரை எப்போதும் மலராது. வேண்டுமானாலும் தமிழர்களுக்கு படர் தாமரை வர வாய்ப்புள்ளது, ஆனால் தாமரை வர வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version