இந்தியா
இந்தியாவில் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்.. மத்திய அரசு அதிரடி முடிவு!
மத்திய அரசு ஜனவரி 16-ம் தேதி முதல், நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட உள்ளதாக அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக இந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருத்துவ ஊழியர்கள், காவல் துறையினர் துப்புரவுத் தொழிலாளர் உள்ளிட்டவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு அதிகமானவர்கள் மற்றும் நோய்த் தொற்றுகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூழி வழங்க எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.