இந்தியா

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்பு குறையும் என தகவல்!

Published

on

இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு உத்தரவு, வெற்றிகரமாக இருப்பின் கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாம்.

சமூக இடைவெளி, எல்லைகளுக்குச் சீல் வைத்தது போன்றவை தொடர வேண்டும் என்றும் ஆய்வு முடிவுகள் வலியுறுத்தியுள்ளது.

இந்தியா கொரோனாவை தடுக்க கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் பயனாக அடுத்த வாரம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று அந்த ஆய்வில் பங்கேற்ற துணை பேராசிரியை தீப ஸ்ரீராய் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version