உலகம்

பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கான் அரசு: அடுத்தது ராணுவ ஆட்சியா?

Published

on

பாகிஸ்தானில் அதிபர் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்தது என தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து, அடுத்ததாக அந்நாட்டில் இராணுவ ஆட்சியா? என்ற கேள்வி எழுந்துள்ளது

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விரைவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ராஜினாமா செய்யவில்லை

இந்த நிலையில் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த முக்கிய அரசியல் கட்சியான MQM என்ற கட்சி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

கூட்டணி கட்சியான முக்கிய கூட்டணி கட்சி இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தால் எதிர்க்கட்சிகள் இணைந்து அரசு அமைக்க முயற்சித்து வரும் நிலையில் ராணுவ ஆட்சி நடைபெறும் அழுத்தப்படுவதால் உள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version