தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலினை ரகசியமாக சந்தித்தேனா? கமல் பதில்

Published

on

நான் யாரையும் ரகசியமாக சந்திக்கவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள நீதி மய்யம் கட்சியின் தலைவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினை நீங்கள் ரகசியமாக சந்திததாக தகவல்கள் வருகின்றனவே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘நான் யாரையும் ரகசியமாக சந்திக்கவில்லை. யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. உதயநிதியை நான் சந்தித்தாக வந்த தகவல்கள் அனைத்தும் ஊடகங்களின் யூகம் தான். இதே போல் நாம் தமிழர், ஒளவைசி போன்றோரை நான் சந்தித்தாக வந்த தகவல்களும் ஊடகங்களின் யூகம் தான்’ இவ்வாறு கூறினார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கமலும் திமுகவும் இமயமலையோடு மோதப் பார்க்கின்றனர் என்று விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version