தமிழ்நாடு

நான் தான் MGR வாரிசு.. அடம்பிடிக்கும் கமல்ஹாசன்

Published

on

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான் தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘வேலை செய்யாமல் காசு வாங்குபவர்கள் சோம்பேறிகள். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். எம்ஜிஆர் கொண்டு வந்த இரட்டை இலையை விருந்து சாப்பிடும் இலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் எம்ஜிஆரை இழுக்கிறாரே என்று கேட்கிறார்கள். நான் எம்ஜிஆரை கையில் எடுக்கவில்லை, அவர் தான் என்னை கையில் எடுத்துள்ளார். ஆட்சியில் இருப்பவர்கள் மக்களிடம் இருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டார்கள்.

அவர்களுக்கு மக்களம் ஞாபகம் இல்லை, மக்கள் திலகத்தையும் ஞாபகம் இல்லை. வெறுமனே மக்கள் திலகம் என்ற பெயரில் திருவிழா காண்கிறார்கள். எம்ஜிஆர் இருந்திருந்தால் இவர்களை இறக்கி விட்டிருப்பார்கள். எம்ஜிஆர் கண்ட கனவுகளை நிறைவேற்றினாலே போதும், அவரது அடுத்த வாரிசு நான் தான்’ இவ்வாறு பேசினார்.

Trending

Exit mobile version