இந்தியா
கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் கள்ள உறவில் ஈடுபடுவது தற்கொலைக்கு தூண்டப்படாத வரை கிரிமினல் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
கள்ள உறவு விவகாரத்தில் ஆணுடன் சேர்த்து சம்மந்தப்பட்ட பெண்ணுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், ஆணும், பெண்ணும் சம உரிமை என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 வருட தண்டனை என்பது சரியல்ல. எனவே பிரிவு 497 அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்படுகிறது.
கணவன், மனைவி இடையே விவகாரத்து நடக்க தகாத உறவும் காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் தகாத உறவு இருந்தால் அது கிரிமினல் குற்றம். அதன் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.