தமிழ்நாடு

டாஸ்மாக்கில் மதுவாங்கிவிட்டு இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பிரச்சாரம்!

Published

on

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து வரும் குழு திடீரென நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்த திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் திருச்சியில் ஷர்மிளா சங்கர் என்பவர் தலைமையிலான பிரச்சார குழு இல்லம் தேடி கல்வி திட்டத்தை பிரச்சாரம் செய்துவந்த நிலையில் அந்த குழு திடீரென நீக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் இல்லம் தேடி கல்வி பிரச்சாரக் குழுவில் இருந்து சர்மிளா சங்கர் தலைமையிலான குழு நீக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் மது வாங்கிக் கொண்டு இல்லம் தேடி கல்வித்திட்ட பிரச்சார வாகனத்தில் சென்ற வீடியோ வைரல் ஆனதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version