சினிமா
இனி விண்ணிலும் இளையராஜா பாடல் ஒலிக்கும்…உதவிக்கு வரும் நாசா…
1976ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தொடர்ந்து பல கிராமத்து திரைப்படங்களில் மண் வாசனை கமழும் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். 80லிருந்து 90 வரை 10 வருடங்கள் திரையுலகை கட்டி ஆண்டார் இளையராஜா.
அப்போது அவர் இசையமைத்த பாடல்கள்தான் இப்போதும் பலருக்கும் பிடித்தமான பாடலாக இருக்கிறது. பெரும்பாலானோரின் கார் பயணத்தில் அவரின் பாடல்கள்தான் வழித்துணையாக இருக்கிறது. கலைஞர் கருணாநிதி அவருக்கு இசைஞானி பட்டம் கொடுத்து கௌரவித்தார். தற்போதும் ஆக்டிவாக இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் பாடல்கள் விண்ணிலும் ஒலிக்கவுள்ளது. புரியவில்லையா? அதாவது விண்வெளியில் அவரின் பாடல்கள் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சாட்டிலைட் தயாரிக்கும் குழு ஒன்று நாசாவின் உதவியுடன் சாட்டிலைட் ஒன்றை விண்ணில் ஏவ உள்ளது. இதில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கவுள்ளது.
இந்த செய்தி இளையராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.