சினிமா செய்திகள்

பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்… பத்மவிபூஷனை திருப்பி அளிக்கிறாரா இளையராஜா?

Published

on

இசை அமைப்பாளர் இளையராஜா தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசிடமே திருப்பி வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிரசாத் ஸ்டுடியோஸ் மற்றும் இளையராஜா இடையே எழுந்துள்ள பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் பிரசாத் ஸ்டுடியோசை விட்டே வெளியேறிவிட்டார் இளையராஜா. இந்த விவகாரம் இதோடு முடிந்தது என்று நினைத்தால் அது தான் இல்லை. தொடர் கதையாகி வருகிறது பிரசாத் ஸ்டுடியோஸ் இளையராஜா விவகாரம்.

இதுகுறித்து திரைப்பட இசைக்கலைகர்கள் சங்கத்தின் தலைவர் தீனா கூறுகையில், “பிரசாத் ஸ்டுடியோ விவகாரத்தில் இளையராஜாவை அவமானப்படுத்தியதி மிகப்பெரிய தவறு. இந்த விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசிடமே திருப்பி அளிக்க உள்ளதாக இளையராஜா என்னிடம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சொந்தப் பிரச்னைக்காக மத்தியாரசின் விருதை திருப்பி அளிப்பதில் என்ன நியாயம் உள்ளது? என ட்விட்டரில் நெட்டிசன்கள் மத்தியில் தனி விவாதமே எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version