சினிமா செய்திகள்

பிரசாத் ஸ்டுடியோவை அரசுடமையாக்க வேண்டும்… திடீர் போஸ்டரால் பரபரப்பு!

Published

on

பிரசாத் ஸ்டுடியோவை அரசுடமையாக்க வேண்டும் என சென்னையின் முக்கியப் பகுதிகளில் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான சர்ச்சை தற்போது நீண்ட காலமாகவே தொடர் கதையாகி வருகிறது. நீதிமன்றம் வரை சென்ற பிரச்னையில் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்கும் தொடர்பே இல்லை என இளையராஜாவை காலி செய்ய சொல்லியது வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

ஆனாலும் இந்த சண்டையும் சர்ச்சையும் முடிந்ததாகத் தெரியவில்லை. சென்னையில் சினிமா பகுதிகளான வடபழனி, சாலிகிராமம், கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இளையராஜா பக்தர்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சர்ச்சைக்கு உரியதாக அமைந்துள்ளது. அந்த போஸ்டரில், “இசைக்கடவுள் இளையராஜாவிடம் இருந்து இசைச் சொத்துகளை சூறையாடிய பிரசாத் ஸ்டுடியோஸ் கும்பலை கைது செய்!” என அச்சிடப்பட்டுள்ளது.

மேலும், ”40 ஆண்டுகளாக இசைஞானி பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவை அரசு உடைமையாக்கி இசை மியூசியத்தை உருவாக்கு தமிழக அரசே!” என்றும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version