தமிழ்நாடு

ஜெயலலிதாவை நான் பார்க்கவே இல்லை: ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் இளவரசி!

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களில் நான் ஒரு முறை கூட பக்கத்தில் அவரை சென்று பார்க்கவில்லை என ஆறுமுகசாமி ஆணையத்திடம் இளவரசி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சை பெற்றார் என்பதும் அதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என்பதும் தெரிந்ததே

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இளவரசி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சற்று முன் இளவரசி ஆஜராகி கூறியபோது ’மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக் கொண்டார் என்றும் நான் 75 நாட்கள் மருத்துவமனைக்கு சென்று வந்தேன் என்றும் ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடியாக ஜெயலலிதாவை பார்த்தேன் என்று இளவரசி ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

 

Trending

Exit mobile version