சினிமா செய்திகள்
தடையை தாண்டி நாளை தொடங்குகிறது இளையராஜா 75!
![Ilayaraja 75 concert_2019_01_31 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/Ilayaraja-75-concert_2019_01_31.jpg)
இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாளை கொண்டடும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா 75 என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நாளை பிப்ரவரி 2 மற்றும் நாளை மறுநாள் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் வரும் வருமானம் மூலம், சினிமா கலைஞர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என முன்னதாக விஷால் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இளையாராஜாவின் இசை நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் சதீஷ் குமார் தாக்கல் செய்த வழக்கை, நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடைசி நேரத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் உள்நோக்கம் உள்ளதாக கூறி தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும், அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டான தயாரிப்பாளர் சங்க வரவு செலவு கணக்குகளை மார்ச்சில் நடைபெறும் பொதுக்குழுவில் சமர்பிக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தி நிகழ்ச்சி நடத்த எந்த ஒரு தடையுமில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.