தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு வரும் ஐகியா.. எங்கு தெரியுமா?

Published

on

உலகின் மிகப் பெரிய ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா விரைவில் தமிழ்நாட்டில் தங்களது ஷோ ரூம் மற்றும் உற்பத்தி ஆலையைத் தொடங்க உள்ளது.

ஸ்வீடிஷை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா இந்தியாவில் ஹைதராபாத், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தங்களது ஷோ ரூம்களை நிறுவி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் எப்போது ஐகியா நிறுவனம் தங்களது கிளையைத் தொடங்கும் என எதிர்பார்த்து வந்த நிலையில் இரட்டிப்பு சந்தோஷமாக விரைவில் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுவும் தூத்துக்குடியில் உள்ள சர்வதேச பூங்காவில் ஃபர்னிச்சர் உற்பத்தி ஆலையும், கோயம்புத்தூரில் ஷோ ரூமையும் ஐகியா தொடங்க தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது இரண்டும் தமிழ்நாட்டிற்கு வரும் போது அது கிட்டத்தை 3000 நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version