இந்தியா

ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை 3வது அலை: ஐஐடி வல்லுனர்கள் கணிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்றும் அதன்பின் படிப்படியாக குறையும் என்றும் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை குறித்து ஏற்கனவே மிகச்சரியாக கணித்தவர்கள் மதுகுமளி வித்யாசாகர் மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.யின் மனிந்திரா அகர்வால் ஆகியோர் தற்போது மூன்றாம் அலை குறித்து கணிப்பை வெளியிட்டு உள்ளனர்.

இது குறித்த ஆய்வு அறிக்கையின்படி மூன்றாவது அலை ஆகஸ்ட் மாதம் அதாவது இம்மாதம் தொடங்கும் என்றும் அதன்பின் படிப்படியாக அதிகரித்து அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக குறைந்து மூன்றாவது அறை முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தற்போது கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக கூறலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது அலை போன்று மூன்றாவது அறையில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் இரண்டாவது அலையில் தினமும் நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது அறையில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை தினமும் பாதிப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளனர். இதனை அடுத்து இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உறுதி என்று கூறப்படுவதால் பொது மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version