Connect with us

இந்தியா

ஐநாவில் இம்ரான்கானை அலறவிட்ட இந்தியாவின் சினேகா; வைரல் வீடியோ!

Published

on

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றியபோது, ‘இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புவதாகவும்,ஆனால் அதே நேரத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி சினேகா துபே, ‘ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு அந்த தீயை அணைக்க தீ வைத்தவரே முற்படுவது போல் பாகிஸ்தானின் செயல் உள்ளது என்று கூறியதோடு, பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது என்றும் இது உலகத்திற்கே பெரும் ஆபத்தாக உள்ளது என்றும் உலக அரங்கில் பொய்யை மட்டுமே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் அந்த பொய்யை அம்பலப்படுத்தும் கடமை அண்டை நாடான எங்கள் நாட்டிற்கு இருக்கிறது என்றும் கூறினார்.

காஷ்மீர் மற்றும் லடாக் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறிய சினேகா துபே, உலகையே அதிர வைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் பின்லேடன் போன்ற ஒரு நபரை தியாகி போல் சித்தரித்து வரும் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாக கூறுவது அப்பட்டமான பொய் என்றும், பாகிஸ்தான் அமைதியை விரும்பினால் முதலில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் இளம் வெளியுறவுத்துறை அதிகாரி சினேகா துபேயின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்3 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா14 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்14 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!