தமிழ்நாடு

நீ ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டி, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா: கொக்கரித்த எடப்பாடி பழனிசாமி!

Published

on

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து ‘நீ ஆம்பளையா இருந்தா’ என்று ஏக வசனத்தில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் நிலவிவந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரம் தற்போது தான் சூடுபிடித்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தின் மத்தியில் நேற்று முன்தினம் வாக்களர்கள் மத்தியில் பேசிய அவர், திமுகவினர் மக்களை கொட்டகையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என பேசினார்.

அப்போது பேசிய அவர், ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி, நீ ஆம்பளையா இருந்தா, நீ வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா, நீ மீசை வச்ச ஆம்பளையா இருந்தா அவங்களை வெளியே விடு என காட்டமாக திமுகவினரை நோக்கி சீறி பாய்ந்தார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

இயக்குனர் நவீன் எடப்பாடியின் இந்த பேச்சுக்கு ஆற்றிய எதிர்வினையில், ஆம்பளையா இருக்கிறதுக்கும் வீரத்திற்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளையா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளையா? இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த மாதிரியான வசனம் பேசுவீர்கள்? இது பெண்களை இழிவுபடுத்தும் செயல் ஒன்று கூறியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version