தமிழ்நாடு

பெண்கள் நெருப்பாக இருந்தால் #MeToo எப்படி வரும்? பிரேமலத்தா விஜயகாந்த் அதிரடி!

Published

on

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய திரைப்பட நகரங்களில் இருந்தும் ஆண் பிரபலங்கள் பெண்களைப் பாலியில் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அது அரசியல் மேடைகளில் பரபரப்பினை ஏற்படுத்தி வருகிறது.

பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது என்பது அனைத்துத் துறைகளில் நடைபெறும் நிலையில் சினிமா துறையில் மட்டும் பரபரப்பாகப் பேசப்பட்டும், விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஒரு புறம் இதை நடிகைகள் சிலர் தங்களது விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலத்தா விஜயகாந்த் “ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo விவகாரம் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தி வரும் நிலையில் இவரது கருத்து மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version