தமிழ்நாடு

வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்தால் 2 மணி நேரத்தில் மருந்துகள் வரும்: மருந்து விற்பனையாளர்கள் தகவல்!

Published

on

வாட்ஸ் அப் மூலம் தகவல் கொடுத்தால் தேவையான மருந்துகள் வீடு தேடி வரும் என மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புகள் காரணமாக பொதுமக்களுக்கு அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகளுக்கு அல்லது மருந்து கடைகளுக்கு செல்வது சாத்தியம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட எந்த மருத்துவ தேவையாக இருந்தாலும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அளித்தால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் அல்லது வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மருந்து மற்றும் மருத்துவ தேவை இருந்தால் உடனடியாக 9342066888 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டால் அவர்களுடைய வீட்டுக்கே கொண்டு வந்து மருந்துக்ள் தரப்படும் என்றும், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு மருந்து பொருட்களில் 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version