இந்தியா
மீண்டும் ஊரடங்கு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல்வர்!
![Uddav thakrey - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/06/Uddav-thakrey.jpg)
இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பாதித்த சீனாவின் வூகான் மாகானதை விட அதிகளவில் இங்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். ஊரடங்கைத் தளர்த்தினால் பெரும் அளவில் பாதிப்பு அதிகரிக்கும். எனவே மீண்டும் ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இன்னும் ஆபத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. கொரோனாவுக்கு எதிராகப் போராட உள்ளதால் பொருளாதார மேம்பாட்டு குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது.
மீண்டும் கொரோனாவுக்கு எதிரான மெஷின் தொடருகிறது என்றும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே கூறியுள்ளார்.