இந்தியா
ரேஷன் கார்டு இல்லையென்றாலும் இலவச ரேஷன் பொருட்கள்; புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்!
![Free Ration Items To Migrant Workers - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/05/Free-Ration-Items-To-Migrant-Workers.jpg)
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி போன்ற அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அவை குறித்து இங்கு விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு இல்லை என்றாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒவ்வொருவருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, ஒரு கிலோ பருப்பு போன்றவை வழங்கப்படும்.
இதன் மூலம் 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைவார்கள். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.
மேலும் ஊர் திரும்பியுள்ள தொழிலாளர்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கிழ் பணி வாய்ப்பு வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், ஒரு தேசம், ஒரு ரேஷன் கார்டு திட்டம் கீழ் நாடு முழுவதும் எங்கு இருந்து வேண்டுமானாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்.
ஆகஸ்ட் 2020-க்குள் 23 மாநிலங்களில் 67 கோடி பயனாளர்கள் அல்லது 83 சதவீத ரேஷன் கார்டு பயனாளர்கள் ஒரு தேசம், ஓரு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் கொண்டு வருவார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.