வணிகம்
வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக பணமிருந்தால் திவாலாகும் போது யார் பொறுப்பு!
![Bankrupt - Bhoomitoday வங்கி, திவால், பணம், சேமிப்பு கணக்கு, காப்பீடு, வங்கி திவால் சட்டம், வங்கி திவால், Bankruptcy, Responsible, Money, Bank, Savings Account, bankruptcy in tamil, bankruptcy code](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Bankrupt.jpg)
பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வைத்து இருக்கும் போது திவாலானால் ஒரு லட்சம் வரை காப்பீடு உள்ளது.
இந்நிலையில் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்தால் அவர்கள் பணத்திற்கு ஏன் பாதுகாப்பு இல்லை என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வாடிக்கையாளர்களின் மொத்த பணமும் திருப்பி அளிக்கப்படும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது. இது குறித்து மத்திய அரசும், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் நிதி நிறுவனமும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.