செய்திகள்

பிரபல மதபோதகர் இல்லத்தில் ஐடி ரெய்டு

Published

on

பிரபல மதபோதகரான பால் தினகரன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் இருந்தே பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பில் ஈடுபடும் பிரபல நிறுவனங்களைக் குறிவைத்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத பணத்தையும் கைப்பற்றி வருகின்றனர்.

இந்தச் சூழலில் பிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இதுவரை சென்னையில் உள்ள பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைகழகம் உள்ளிட்ட 28 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால்தினகரன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது வெள்ளிச்சதிற்கு வந்துள்ளது . இயேசு அழைக்கிறார் குழுமத்துக்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் வருமானவரித் துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending

Exit mobile version