கிரிக்கெட்
#AUSvsIND இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு 20% அபராதம் விதித்த ஐசிசி!
ஆஸ்திரேலியா சுற்று பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தாமதமாகப் பந்து வீசியதால், மொத்த அணி வீரர்களுக்கு 20 சதவீத அபராத விதிக்கப்பட்டுள்ளது.
50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியில் பந்துகளை வீச ஒரு அணிக்கு, 3 மணி நேரம் 30 நிமிடங்கள் வரை அளிக்கப்படும். ஆனால் இந்திய அணி 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
எனவே ஐசிசி கிரிக்கெட் விதிகளின் படி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களுக்கு 20 சதவீதம் போட்டியின் சம்பளத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தவற்றை ஒப்புக்கொண்ட விராட் கோலி, அபராதத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனவே விசாரணை ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் 50 ஓவருக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக, 45 நிமிடங்கள் கூடுதலாக பந்து வீச நேரம் எடுத்துக்கொண்டது இந்த போட்டியாக இருக்கும் என்று ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.