Connect with us

இந்தியா

இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் மரணம்.. மர்ம மரணம் என வழக்குப்பதிவு..!

Published

on

தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணி துறையில் செயலாளராக பணிகள் இருப்பவர் 57 வயது ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் தத்தாத்ரே. இவர் மும்பை சிஸ்டியில் உள்ள கலா கோடா என்ற பகுதியில் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள உணவகத்திற்கு தனது இரண்டு சகாக்களுடன் சென்றுள்ளார்.

இந்த நிலையில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் தத்தாத்தரே தனது சக ஊழியர்களுடன் வெளியே சென்றதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்தது.

முதலில் அவர் இரண்டு சகாக்களுடன் பேட்மிட்டன் விளையாட சென்றார் என்றும் அதன் பிறகு அவர் தனது குடியிருப்புக்கு வந்து தனது துறையின் செயலர் மற்றும் துணைச் செயலாளர் ஆகிய இருவருடன் இரவு உணவிற்காக வெளியே சென்றார் என்றும் கூறப்படுகிறது.

உணவகத்தின் சிசிடிவி கட்சியின்படி மூவரும் 7.55 மணிக்கு உணவகத்திற்கு சென்று உள்ளனர். அதன் பிறகு அவர்கள் 8.52 மணிக்கு உணவு சாப்பிட்டு முடித்த நிலையில் திடீரென பிரசாந்த் தத்தாத்ரே மயக்கம் அடைந்துள்ளதாக அந்த சிசிடிவி கட்சியின் மூலம் தெரிய வருகிறது. அவருடன் சென்ற இரண்டு சக ஊழியர்கள் உடனடியாக டாக்ஸியில் மும்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவருடைய மரணத்தை மர்மமான மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் மறைந்த பிரசாந்த் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவரது இறுதிச் சடங்கிற்காக விமான மூலம் நாக்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்