தமிழ்நாடு
மறுபடியும் கருத்து சொல்லி விஜய் படத்தை ஓட வைக்க விரும்பல.. தமிழிசை அடடே..!
சென்னை: நாங்கள் மீண்டும் கருத்து தெரிவித்து விஜய் படத்தை ஓட வைக்க விரும்பவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய வைரல் ஆகியுள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். ந
இப்போது எல்லோரும் அரசியல் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தவறில்லை.
தமிழக அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லது செய்து இருக்கிறார்கள். இதுவரை இருந்த தமிழக முதல்வர்கள் நல்லதே செய்து ஆட்சி நடத்தி உள்ளனர்.
இனிதான் விஜய் போன்ற ஒருவர் சினிமாவில் இருந்து நல்லது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரது படம் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் அவரை பற்றி நாங்கள் பேசி, அவரது படத்தை ஓடவைக்க விரும்பவில்லை என்று தமிழிசை கூறியுள்ளார்.