தமிழ்நாடு

நான் என்ன வடிவேலா? என்னால் முதல்வராக முடியாது.. திருமாவளவன் உருக்கம்!

Published

on

சென்னை: நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வது போல நானும் முதல்வர்தான் என்று என்னால் சொல்ல முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் தனது பேச்சில், சிலர் எல்லாம் கொள்கை கொள்கை என்று கூறிவிட்டு நிறைய திருடுவார்கள். வகைவகையாக திருடிவிட்டு கடைசியில் போராளி என்று கூறுவார்கள். மாவீரன் என்று சொல்லிக்கொள்வார்கள். உயர்சாதியில் பலர் அப்படி இருக்கிறார்கள். நாமெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள். நேர்மையாக வாழ வேண்டும்.

எனக்கு அனைவரையும் அழைத்து விருந்து கொடுக்க தெரியாது. என்னிடம் தோட்டமும். நான் அழைத்தால் யாரும் வந்து சாப்பிட கூட மாட்டார்கள். என்னிடம் 10க்கு 10 வீடுதான் இருக்கிறது. அங்கு கூப்பிட்டால் முதல்வர் எல்லாம் வந்து சாப்பிடமாட்டார்.

எனக்கு முதல்வர் ஆகும் எண்ணமெல்லாம் கிடையாது. நான் என்ன வடிவேலா, நானும் ரவுடிதான், நானு ரவுடிதான் என்று சொல்ல. எனக்கு அரசியல் நிலவரம் தெரியும். நாம் முதல்வர் ஆக முடியாது என்பதை உணர்ந்தே நான் அரசியல் செய்து வருகிறேன், என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version