சினிமா செய்திகள்

டியூனையும் கருத்தையும் திரும்ப பெற மாட்டேன்: மோடி-அம்பேத்கார் ஒப்பீடு குறித்து இளையராஜா!

Published

on

போட்ட டியூனை திரும்ப பெற மாட்டேன்,அதே போல் கூறிய கருத்தையும் திரும்பப் பெற மாட்டேன்என இசைஞானி இளையராஜா தெரிவிtஹ்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா அதில் மோடியை புகழ்ந்து கூறியதோடு, மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு இருந்தார் .

இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர் என்றும் ஒரு சிலர் பாராட்டு தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளையராஜாவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்ததை அடுத்து அவர் அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர் .

இந்த நிலையில் இது பற்றி இளையராஜா தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் திரைப்படத்திற்கு நான் போட்ட ட்யூனை திரும்ப பெற மாட்டேன் என்றும் அதேபோல் பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தையும் திரும்ப பெற மாட்டேன் என்று கூறியுள்ளார் .

பிரதமர் மோடி குறித்து கூறியது தன்னுடைய சொந்த கருத்து என்றும் தன்னுடைய கருத்தை மற்றவர்கள் விமர்சனம் செய்தால் அவர்களுடைய கருத்தை விமர்சனம் செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளார் .

மோடிக்கு பிரதமர் மோடி பற்றி அந்த புத்தகத்தில் தான் முழுமையாக படித்த பிறகு முன்னுரை எழுதியதாகவும் இளையராஜா கூறியுள்ளதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version