டிவி

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களைக் கடுமையாகக் காயப்படுத்துவேன்.. பாலாஜி எடுத்த சபதம்!

Published

on

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கடுமையாகக் காயப்படுத்துவேன் என்று பாலாஜி சபதம் எடுத்துள்ளார்.

இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் குறும்பா பாடல் ஒலிக்க, பாலா, ஆஜித் இருவரும் ஸ்டோர் ரூம் சென்றால், அங்கு பாலாஜியின் பிறந்தநாள் கேக் மற்றும் வாழ்த்து அட்டை வைக்கப்பட்டு இருந்தது.

கேக்கை ஆஜித் எடுத்து வர, வாழ்த்து அட்டையை படித்த பாலாஜி எமோஷ்ன் ஆகி அழுகிறார். அர்ச்சனா உள்ளிட்ட பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவரை ஆசுவாசப் படுத்துகின்றனர்.

பிக் பாஸ் வீட்டின் உள்ளேயும் அப்படிதான், வெளியேவும் அப்படிதான், கொஞ்சம் கோவம் வரும், கொஞ்சம் எமோஸ்னல், ஆனா எல்லாத்தையும் மறந்துவிடுவேன். இதுவரைக்கும் வீட்டில் யாரையாவது கஷ்டப்படுத்தி இருந்தாலும், எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் எல்லோரையும் திருப்பி, திருப்பி காயப்படுத்துவேன். ஏன் என்றால் இந்த விளையாட்டு அப்படி என்று பாலாஜி சபதம் எடுத்துள்ளார்.

பிக் பாஸ் இறுதிக் கட்டத்திற்குச் செல்ல இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், இன்னும் 13 பேர் வீட்டில் உள்ளனர். எனவே வரும் நாட்களில் போட்டி கடுமையாக இருக்கும். பலர் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version