தமிழ்நாடு
சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. கவுசல்யா பேட்டி!
சென்னை: சாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன் என்று திருமணத்திற்கு பின் உடுமலைபேட்டை கவுசல்யா பேட்டி அளித்துள்ளார்.
உடுமலைபேட்டை கவுசல்யா நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளரும், பறையிசை கலைஞருமான கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்தி, என்பவருடன் காதல் சுயமரியாதை திருமணம் செய்தார்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி அளித்துள்ளார். அதில் சாதி ஒழிய தொடர்ந்து பாடுபடுவேன். சாதி ஒழிப்புக் போராட்டத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம். ஜாதிக்கு எதிரான எங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கும்.
ஆணவ படுகொலைகளை எதிர்ப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு போராடுவோம். தமிழக அரசு உடனடியாக ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி அளித்துள்ளார்.