தமிழ்நாடு
‘என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்!’- அரசியல் விஸ்வரூபம் எடுக்கும் சத்யராஜ்
பெரியாரிய மற்றும் திராவிடக் கொள்கைகளில் நாட்டம் கொண்ட சத்யராஜ், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.
இது குறித்து அவர் வெளியிட்டதாக பரவிவரும் அறிக்கையில், ‘என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் சத்யராஜ், திமுகவுக்காக வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் செய்வார் என்று பரபரக்கப்பட்டது. திராவிடக் கொள்கைகளில் சத்யராஜ் ஊறிப் போயிருந்தாலும், நேரடியாக கட்சி மேடைகளில் பங்கேற்பதை அவர் தவிர்த்தே வந்திருக்கிறார். இந்நிலையில் அவரின் அறிக்கை மேலும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
சத்யராஜ், திமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா அல்லது, மகள் திவ்யாவுக்காக மட்டும் பரப்புரையில் ஈடுபடுவாரா எனத் தெரியவில்லை.