சினிமா செய்திகள்
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டுவேன் – இளையராஜா உறுதி!
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை தான் ஏற்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பல பிரபலங்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை பொழிந்து வந்தனர்.
சாலிகிராமத்தில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு முன்பும் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு, இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த இளையராஜா ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அதன்பின் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
அதன்பின்னர், நேற்று மாலை இசை கொண்டாடும் இசை என்ற பெயரில் இசை நிகழ்ச்சி பூந்தமல்லியில் நடந்தது. இதில் இளையராஜா தான் பல்வேறு கால கட்டங்களில் இசை அமைத்த பாடல்களை பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அப்போது அவர் பல்வேறு சுவராசிய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பொறுப்பை ஏற்கிறேன். இசைக்கலைஞர்கள் சங்கக் கட்டடம் கட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார்.