சினிமா செய்திகள்

மறுபிறவி எடுத்துவிட்டேன்: ரெட்கார்டு நீக்கப்பட்டது குறித்து வடிவேலு!

Published

on

நடிகர் வடிவேலு திரைப்படம் நடிக்க கடந்த சில ஆண்டுகளாக ரெட்கார்டு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ரெட்கார்டு நீக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் வடிவேலு நெகிகழ்ச்சியாக கூறியபோது ’நான் மறுபிறவி எடுத்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது எனக்கு மறுபிறவி என்றும் அவர் பேட்டியளித்துள்ளார். மீண்டும் சினிமாவில் நான் நடிக்கப்போவது முதன் முதலாக நான் வாய்ப்பு தேடி சென்ற போது கிடைத்த உணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் எனது ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றத்தை வைத்துள்ளதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் கூறினார்.

சுராஜ் இயக்கும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறிய வடிவேலு, மேலும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அதன் பின்னர் மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வந்த ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்ற நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தில் வடிவேலு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஓடிடி தளத்திற்காக ஒரு திரைப்படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது. நடிகர் வடிவேலுக்கு ரெட்கார்டு நீக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் மீண்டும் பழைய வடிவேலுவை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version