தமிழ்நாடு

நான் போட்டியிடாமல் இருக்க ரூ.10 கோடி விலை பேசினார்கள்: மநீம பிரபலம் தகவல்!

Published

on

நான் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக. திமுகவுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களில் ஒருவரும் கவிஞரும் பிக்பாஸ் போட்டியாளருமான சினேகன் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு அந்த பகுதியில் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சினேகன், நான் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருப்பதற்காக எனக்கு ரூபாய் 10 கோடிக்கு விலை பேசினார்கள் என்றும் ஆனால் போட்டியிடுவதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சினேகனுவுக்கு ரூபாய் 10 கோடி விலை பேசிய கட்சிக்காரர் யார் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார். இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே தொகுதியில் தான் நடிகர் மயில்சாமி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version