சினிமா செய்திகள்

அதுக்கான நேரம் இன்னும் இருக்குன்னு நினைக்கிறேன் – தீபிகா படுகோனே!

Published

on

நடிகை தீபிகா படுகோனுக்கும் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் ஆனது. இந்நிலையில், தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ளார் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது.

இதற்கு பதிலளித்த தீபிகா படுகோனே, குழந்தை பெறுவது ஒரு வரம். ஆனால், அதற்கான நேரம் இன்னும் இருக்குன்னு நினைக்கிறேன். வீணாக வதந்திகளை யாரும் சோஷியல் மீடியாவில் தேவையில்லாமல் பரப்ப வேண்டாம். அந்த நல்ல நாள் வந்தால், நானே சந்தோஷமாக அறிவிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தீபிகா படுகோனே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் காட்சி வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது தான் அவரது வயிறு பெரிதாக உள்ளதாக வதந்திகள் பரவின.

இதனையடுத்து தீபிகாவின் ரசிகர்கள் மற்றும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வாழ்த்து செய்திகள் அனுப்ப ஆரம்பித்தவுடன், கடுப்பான தீபிகா படுகோனே, இந்த விளக்கத்தை கூறியுள்ளார்.

Trending

Exit mobile version