இந்தியா
8 நிமிடத்தில் ரூ.2.25 கோடி சம்பாதித்தேன்.. தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் தரும் ஆச்சரிய தகவல்!
8 நிமிடத்தில் ரூபாய் 2.25 கோடி யாராவது பங்குச்சந்தையில் சம்பாதிக்க முடியுமா? இதைக்கேட்டால் கண்டிப்பாக முடியாது என்றுதான் அனைவரும் கூறுவார்கள். ஆனால் தொழிலதிபர் அஷ்னீர் குரோவர் என்பவர் தான் எட்டு நிமிடத்தில் ரூ 2.25 கோடி சம்பாதித்தாக தான் எழுதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
பாரத்பே நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குனர் அஷ்னீர் குரோவர் என்பவர் ‘Doglapan: The Hard Truth about Life and Start-ups’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் தான் வாழ்க்கையில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்கள், பங்குச்சந்தையில் செய்த முதலீடு அதில் கிடைத்த லாபம், நஷ்டம் ஆகியவைகளை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் அந்த புத்தகத்தில் ஜொமைட்டோ ஐபிஓவை வாங்கியதன் வாயிலாக தனக்கு 8 நிமிடத்தில் ரூபாய் 2.25 கோடி லாபம் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் முக்கிய உணவு டெலிவரி நிறுவனங்களில் ஒன்றான ஜொமைட்டோ நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐபிஓ வெளியிட்டது. இந்த ஐபிஓவை வாங்குவதற்காக பலர் முன் வந்தனர் என்பதும் ஏராளமானோர் இந்த பங்குகளை வாங்கியதன் காரணமாக லாபம் அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
76 ரூபாய்க்கு ஜொமைட்டோ பங்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அந்த பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 116 ரூபாய்க்கு விற்பனையானது. இதனையடுத்து உடனடியாக அந்த பங்குகளை வாங்கியவர்களுக்கு சுமார் 53 சதவீதம் லாபம் கிடைத்தது என்பது குறிபிடத்தக்கது.
அதே நாளில் அந்த பங்கு இன்னும் அதிக விலைக்கு போகும் என்று கணித்த அஷ்னீர் குரோவர் உடனடியாக தனது பங்குகளை விற்க தயாராகும்படி தனது உதவியாளருக்கு உத்தரவிட்டதாக பங்குகளை விற்கும்போது 136 ரூபாய் என உயர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக அவருக்கு வெறும் எட்டு நிமிடத்தில் 2.25 கோடி லாபம் பெற்றதாக அவர் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.
76 ரூபாய்க்கு வாங்கி , பங்கு விற்பனை செய்தபோது 1326ரூபாய் என்று இருந்ததை அடுத்து தனக்கு 8 நிமிடங்களில் 225 கோடி லாபம் பெற்றதாக கூறியதை படித்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் பேராசை காரணமாக CarTrade இந்த நிறுவனத்தின் ஐபிஓவில் முதலீடு செய்ததாகவும் அதனால் தனக்கு 25 லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.