சினிமா

‘’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மதிப்பு எனக்குத் தெரியும்’- விஜே தீபிகா நெகிழ்ச்சி!

Published

on

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் ஐஷ்வர்யாவாக நடிக்க வந்தது குறித்தும் தன் கதாபாத்திரம் குறித்தும் விஜே தீபிகா பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஷ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து சாய் காயத்ரி விலகியுள்ளார். இப்போது அந்த கதாபாத்திரத்தில் இதற்கு முன்பு நடித்த விஜே தீபிகாவே மீண்டும் நடிக்கிறார். ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு மீண்டும் நடிக்க வந்தது குறித்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெகிழ்ச்சியான விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

#image_title

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்று சொல்வார்கள். அது சரிதான். ஆனால், முயற்சியும் நம்பிக்கையும் ஒருமுறை இல்லை ஆயிரம் கதவுகளை திறக்க செய்யும். ஐஷ்வர்யாவாக என்னுடைய பயணம் பாதியில் முடிந்தது. ஆனால், இப்போ எங்கே முடிந்ததோ அங்கேயே ஒரு தொடக்கம் வந்திருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான் சொல்ல போகிறேன். ‘ஒரு பொருள் இல்லாதபோதுதான் அதன் வலி நமக்குப் புரியும்’. அது எனக்கு நிறையவே புரிந்தது நன்றாகவே தெரிந்தது.

இப்போது அது எனக்கு திரும்ப கிடைத்திருக்கிறது. அதன் மதிப்பு எனக்கு நன்றாகவே தெரியும். இவ்வளவு நாள் எனக்காக வருத்தப்பட்டவங்களுக்கும் இப்போ எனக்கு வாழ்த்து சொல்பவர்களுக்கும் மிக்க நன்றி. தீபிகாவுக்கும், ஐஷ்வர்யாவுக்கும் உங்களுடைய வாழ்த்து எப்போதும் தேவை’. இந்த உலகத்திற்கும் கடவுளுக்கும் நன்றி’ என நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் தீபிகா.

author avatar
seithichurul

Trending

Exit mobile version