சினிமா செய்திகள்
யார திருப்திப் படுத்தணும்னு எனக்குத் தெரியும் – ரகுல் ப்ரீத் சிங் சீற்றம்!
இந்திய நடிகையாக மாறிவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், அவ்வப்போது சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், நெட்டிசன்கள் சிலர் தனது புகைப்படத்திற்கு கீழே பதிவிடும் மோசமான கமெண்டுகள் குறித்து பேசிய ரகுல், அனைவரையும் திருப்திப் படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாமல் பலர் இயங்கி வருகின்றனர். அவர்கள் தான் எனது புகைப்படங்களுக்கு மோசமான மிகவும் கீழ்த்தரமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். நான் எனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் கருத்தை மட்டுமே கேட்பேன். வேறு வீண் வேலைகளை செய்து வருபவர்கள் பற்றி எனக்கு எந்தவித பயமோ. பிரச்னையோ இல்லை என தடாலடியாக தெரிவித்துள்ளார்.